குலதெய்வ கோவிலில் தனியாக சாமி தரிசனம்; கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு.. நாமக்கல்லில் அதிர்ச்சி.!
குலதெய்வ கோவிலில் தனியாக சாமி தரிசனம்; கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு.. நாமக்கல்லில் அதிர்ச்சி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியில் வசித்து வருபவர் செங்கோட்டு வேல் (வயது 44). விவசாயியாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவரின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில், இளம்பெண்ணின் உடல் மிதந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்மணிக்கு 20 வயதே இருக்கலாம் என்பதால், இறந்தவர் யார்? என விசாரணை தொடர்ந்தது. அப்போது, அவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரனின் மகள் ஆஷிகா (வயது 18) என்பது உறுதியானது.
ஆஷிகா திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் பயோ கெமிஸ்ட்ரி முதல் ஆண்டு பயின்று வருகிறார். ஆனந்தாயி அம்மன் மாணவிக்கு குலதெய்வம் ஆகும். சம்பவத்தன்று, தனது குலதெய்வ கோவிலுக்கு நேரில் தனியே வந்து சாமி கும்பிட்டு சென்றுள்ளார்.
இதன்பின்னர் தான் அவரின் சடலம் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரெனில், அதற்கான காரணம் என்ன? என விசாரணை நடந்து வருகிறது.