நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடலுக்கு இறுதிச் சடங்கு!! ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடலுக்கு இறுதிச் சடங்கு!! ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!



MP vasanthakumar funeral


கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற சுறுப்பினர் வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வசந்தகுமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவரின் உயிரிழப்பிற்கு பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து வசந்த் குமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

vasanthakumar

இதனையடுத்து வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து வசந்தகுமாரின் உடல் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.