விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
ஆத்தீ.. ஒரு மாதம் இவ்வளவா!! மகன்களுக்காக ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்.! நடிகர் ரவி மோகன் கொடுப்பாரா??

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரவி மோகன், ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்
ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து
இதற்கிடையில் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
40 லட்சம் ஜீவனாம்சம்
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் விவகாரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்பொழுது ரவி, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. அவரிடமிருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஆர்த்தி தரப்பில் மகன்களை வளர்ப்பதற்காக மாதம் 40 லட்சம் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு அவர்கள் இருவரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 12ம் தேதி தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: அவர் ஒன்னும் வெறும் காலோடு போகல.! மனசு வலிக்குது.! ஆதங்கத்துடன் ஆர்த்தி ரவி வெளியிட்ட இறுதி அறிக்கை!!
இதையும் படிங்க: சித்திரவதை செய்த மாமியார்! மகளை வாழாவெட்டி ஆக்குனா அம்மா! இணையத்தில் ரவிமோகன் மாமியார் வெளிவிட்ட அறிக்கை இதோ....