மழை வெள்ளத்திலும் தனது குட்டியை பாதுகாக்க போராடும் நாய்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!!

மழை வெள்ளத்திலும் தனது குட்டியை பாதுகாக்க போராடும் நாய்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!!



Mother dog rescued his baby

 

மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னை வெள்ளத்தின் பிடியில் சிக்கி முடிச்சூர் மற்றும் வேளச்சேரி பகுதிகள் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஏரியும் உடைந்தது.

நேற்று முதல் மழை படிப்படியாக குறைந்ததால் மீட்பு பணிகள் துரித முறையில் நடைபெற்று வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மழை நீர் வெளியேற்றப்பட்டு மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மழையின் போது தாய் நாய் ஒன்று தனது குட்டியை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்ற கண்கலங்கவைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.