விஜய் டிவி பொன்னி சீரியல் நடிகருக்கு என்ன ஆச்சு? கை கால் முழுக்க கட்டுகட்டியப்படி வெளியான மருத்துவமனையில் உள்ள புகைப்படம்....



vijay-tv-ponni-serial-hero-sabari-accident-update

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்னி' சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் சபரி தற்போது சோகமான சூழ்நிலையைக் எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு விபத்தில் சிக்கி, தனது கால் எலும்பு முறிவடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

vijay tv actor sabari

சோசியல் மீடியாவில் பகிர்ந்த தகவல்

இந்த விபத்துக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபரி, சிகிச்சை பெற்றுவருகிறார். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், எலும்பில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது என்றும், உடலில் பல இடங்களில் கட்டுகள் இருந்ததால் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

vijay tv actor sabari

ரசிகர்களுக்கான பதிவு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதற்காக அறியப்படும் சபரி, தனது தற்போதைய உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார்.

 "எனக்காக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதிலளிக்க இயலவில்லை. ஆனால் நிச்சயமாக நலமாகவே இருக்கிறேன். விரைவில் திரும்புவேன். உங்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் பிரார்த்தனைகள் எனக்கு அவசியம் தேவை." என்று சபரி பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...

பிரபலமாகிய  சபரி

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, 'பிக் பாஸ்' ரோஸ்ட், 'ஸ்டார் மியூசிக்', 'அது இது எது' போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாகவும் ரசிகர்களிடையே தனி இடம் பெற்றவர் சபரி.

'பொன்னி' சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை வைஷ்ணவி, தனது நண்பர் சபரியை பல இடங்களில் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதோடு, சபரி அவர்களின் திருமண நிகழ்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

சிகிச்சைக்கு பிறகு என்னவாகும்

பொன்னி' சீரியல் முடிவடைந்தாலும், விஜய் டிவியின் பிற நிகழ்ச்சிகளில் கெஸ்ட் மற்றும் தொகுப்பாளராக தொடர்ந்து பங்கேற்று வந்த சபரி, இந்த விபத்துக்குப் பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..

 

 

 

 

 

 

 

இதையும் படிங்க: முத்து செய்த செயலால் விஜயாவின் காலில் விழுந்த தம்பதிகள்! மேலும் பரிசு...சிறகடிக்க ஆசை புரோமொ காட்சி!