அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
திமுக எம்.எல்.ஏ திடீர் மரணத்திற்கு, மு.க.ஸ்டாலினின் உருக்கமான பதிவு!
திமுக எம்.எல்.ஏ திடீர் மரணத்திற்கு, மு.க.ஸ்டாலினின் உருக்கமான பதிவு!
திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் வசிக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
திமுக முன்னாள் அமைச்சரான இவர் திமுக மீனவரணி செயலாளராக உள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார் கே.பி.பி.சாமி.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த
கே.பி.பி.சாமி அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த கே.பி.பி.சாமி இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.கவின் சுறுசுறுப்பான தொண்டராகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே.பி.பி.சாமியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) February 27, 2020
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,மீனவ சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/AhU8mVpTny
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்
அதில், "தி.மு.கவின் சுறுசுறுப்பான தொண்டராகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே.பி.பி.சாமியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,மீனவ சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". என பதிவிட்டுள்ளார்.