மைத்துனனை குத்திக்கொன்ற மாமன்., மாமியாரையும் தாக்கி வெறிச்செயல்.!!

மைத்துனனை குத்திக்கொன்ற மாமன்., மாமியாரையும் தாக்கி வெறிச்செயல்.!!



Man kill his Brother in law in Tiruvanamalai

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மணலூர்பேட்டை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா இவர்களுக்கு 3 மகள்கள் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாண்டியனின் மூத்த மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வரும் ராம்ஜி என்னும் 30 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர் இருவரும் பெண்ணின் பெற்றோர்கள் வீட்டிலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ தினத்தன்று சுகுணாவிற்கும் அவரது கணவர் ராம்ஜிக்கும் சண்டை மூண்டுள்ளது.

திருவண்ணாமலை

இதனால் சுகுணாவின் தாய் இடையிட்டு தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராம்ஜி சுகுணாவின் தாயாரை தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த விஜயாவின் மகன் பரணி ராம்ஜியை தட்டி கேட்டுள்ளார். பின்பு ராம்ஜிக்கும் பரணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் முற்றி ராம்ஜி பரணியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பரணி உயிரிழந்துள்ளார்.

பின்னர் தடுக்க வந்த சுகுணாவையும், விஜயாவையும் கத்தியை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் வரும் முன்பே ராம்ஜி அங்கிருந்து தப்பித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்ஜியை தேடி வருகிறார்.