விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!
குமாரபாளையத்தில் 7 வயது சிறுமிக்கு தின்பண்டம் வாங்கித் தருவதாக ஏமாற்றி இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 7 வயது மகளுடன் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவரது தாயார் தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த நபர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து கடையில் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். மேலும் பணத்தை வாங்கிக் கொண்ட சிறுமி கடைக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் காவிரி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துசென்று வன்கொடுமை செய்துள்ளார்.
மகளை காணாது தேடிய தாய்:
இதனிடையே வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாய் தனது மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் சிறுமியை பல இடங்களில் தேடியலைந்த நிலையில், இரவு 9 மணி அளவில் சிறுமி சோர்வுடன் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் மற்றும் ரத்தக்கரை இருந்ததால் அவரிடம் விசாரிக்கவே, சிறுமி அழுது கொண்டே இளைஞர் செய்த கொடூரத்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!

போலீஸ் விசாரணை:
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் மணி என்ற மணிகண்டன் (வயது 27) என்பதும், கடந்த 10 நாட்களாக குமாரபாளையத்தில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்திருந்ததும் தெரிய வந்தது.
குற்றவாளிக்கு தர்மஅடி:
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள் சமாதானப்படுத்த அனுப்பி வைத்த நிலையில், மணிகண்டனின் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.