1 இல்ல 2 இல்ல 100-க்கு மேல் பிரிட்டன் கடற்கரையில் கரை ஒதுங்கிய புது உயிரினம்.! ஜெல்லிமீன் இல்லையாம்.... அதை தொட்டால் பெரும் ஆபத்து! நீல நிறத்தில் ஜொலிக்குது....!!!
பிரிட்டனின் கும்ப்ரியா மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான வெலெல்லா வெலெல்லா உயிரினங்கள் கரை ஒதுங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீல நிறத்தில் ஜெல்லிமீன்களைப் போலக் காட்சியளிக்கும் இவை, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
‘காற்றடிக்கும் மாலுமிகள்’ என்ற பெயருக்கு காரணம் என்ன?
முதல் பார்வையில் ஜெல்லிமீன்களைப் போலத் தோன்றினாலும், இவை தனித்த உயிரினம் அல்ல. பல சிறிய உயிரினங்கள் ஒன்றிணைந்து செயல்படும் அமைப்பாகும். சுமார் 2 அங்குல அளவுள்ள இவற்றின் மேற்பகுதியில் பாய்மரம் போன்ற ஒளிபுகும் அமைப்பு காணப்படும். காற்றின் உதவியால் சிறிய படகு போல கடலின் மேற்பரப்பில் மிதந்து நகர்வதால், இவை பொதுவாக 'காற்றடிக்கும் மாலுமிகள்' என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியை! அந்த காரியத்துக்காக மிரட்டிய மாணவர்கள்! அதிர்ச்சி பின்னணி...!!!
புயல் காற்றும் வெப்ப அலையும் முக்கிய காரணம்
தகவலின்படி, கடலில் உருவான புயலால் வீசிய பலத்த மேற்குக் காற்றும், பிரிட்டனில் பதிவான 35 டிகிரி செல்சியஸ் வெப்ப அலையும் இந்த உயிரினங்கள் பெருமளவில் கரையை அடைய முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வெப்பமான காலநிலையால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், பலமான காற்று அவற்றை நேரடியாக கரையை நோக்கித் தள்ளியதாக கடல்சார் வல்லுநர்கள் விளக்குகின்றனர். கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
அழகாக இருந்தாலும் தொட வேண்டாம்
கடற்கரையில் நீல நிற ரத்தினங்களைப் போலச் சிதறிக் கிடக்கும் இந்தக் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், கும்ப்ரியா வனவிலங்கு அறக்கட்டளை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 'போர்த்துகீசிய மேன் ஓ வார்' உயிரினம் போல் அதிக விஷத்தன்மை இல்லாவிட்டாலும், இவற்றைத் தொட்டுவிட்டு கண், உதடு அல்லது முகத்தில் கை வைத்தால் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை வெப்பம் நீடித்தால், வரும் நாட்களிலும் பிரிட்டன் கடற்கரைகளில் இந்த நீல நிற கடல் உயிரினங்கள் அதிகமாகக் காணப்படலாம் என வானிலை ஆய்வாளர்களும் கடல்சார் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
I spotted lots of these unusual creatures on Borth Beach in Wales, these are By-the-wind Sailors or Velella velella & are a colony of individual animals & not true jellyfish.
— Andrew Brooks (@AndrewPBrooks) August 3, 2026
There’s a video here which shows more & gives a sense of their scale https://t.co/uVd0EmY5t6 pic.twitter.com/BHH2DhMB4m
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு 7 மாத குழந்தை!! குழந்தை பிறந்த சில மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி!!