15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. உளவியல் நோய் பாதிப்பால் சோகம்?.!



Maharashtra Nair Hospital Employee Suicide 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாயர் மருத்துவமனையில் பதிவாளர் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் குர்பானி (வயது 33). இவர் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். 

15வது மாடியில் இருந்து குதித்து சோகம்:

இந்நிலையில், நேற்று மாலை 04:30 மணியளவில் மருத்துவமனைக்கு சொந்தமான குடியிருப்பு வளாகத்தின் 15 வது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இதனைக்கண்டு அதிச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்கிசோஃப்ரினியா நோய் பாதிப்பால் விபரீத முடிவு?

இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரோஹித் கிஷோர் ஸ்கிசோஃப்ரினியா எனப்படும் கடுமையான உளவியல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக அக்ரிபாடா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.