நடிகர் ராஜ்கிரணுக்கு ஏற்பட்ட நிலைமை… முன்ஜாமின் மனுவால் பரபரப்பு!
அதிர்ச்சி! கிரிக்கெட் விளையாட சென்ற 11-ஆம் வகுப்பு மாணவனின் உடல்.... கண்மாய் முட்புதரில் சடலமாய் மீட்பு! போலீஸ் வலைவீச்சு...!!!
மதுரை கூடல்நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பிளஸ்-1 மாணவன் தமிழ்செல்வன், மாலை வரை வீடு திரும்பாத நிலையில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடியபோது ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே மாணவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவன் தமிழ்செல்வன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடச் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை
மதுரை மாநகர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். பிளஸ்-1 படித்து வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கிரிக்கெட் விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியாததால், கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணியை தொடங்கினர்.
கண்மாய் முட்புதரில் சடலமாக மீட்பு
தேடுதல் நடவடிக்கையின்போது ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள கண்மாய் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள முட்புதரில் தமிழ்செல்வனின் உடல் கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிளஸ்-1 மாணவன் விளையாடச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மாணவியின் தந்தை மீது சந்தேகம்;
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தமிழ்செல்வன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்தது தெரியவந்துள்ளது. இதை அறிந்த மாணவியின் தந்தை, சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும், மாணவியின் தந்தை தமிழ்செல்வனிடம் அவரது வீட்டு முகவரியை கேட்டதாகவும், அதற்கு அவர் தான் வசிக்கும் பட்டியலினப் பகுதியின் முகவரியை தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக் காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
எனினும், மாணவியின் தந்தையின் தொடர்பு குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தமிழ்செல்வனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரையே காலி செய்த 7 கிராமங்கள்?… 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வினோத வழக்கம்!