கண்ணை மறைத்த படிப்பு.. தேர்வுக்கு தயாரான +2 மாணவி, விடுதி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சோகம்..! நடந்தது என்ன?..!!

கண்ணை மறைத்த படிப்பு.. தேர்வுக்கு தயாரான +2 மாணவி, விடுதி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சோகம்..! நடந்தது என்ன?..!!



madurai-12-th-class-student-slipped-form-floor-admit-ho

தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள காமராஜர் சாலையில் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளின் விடுதியும் இருக்கிறது.

அங்கு ஏராளமான மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மேலும், ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று தேர்வு என்பதால் காலையில் விடுதியில் முதல் மாடிக்கு சென்று படித்துக் கொண்டிருந்தார்.

madurai

அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து கீழே தவறி விழுந்ததை தொடர்ந்து, பலத்த காயமடைந்த மாணவியை அங்கிருந்த விடுதி வார்டன் மற்றும் ஆசிரியைகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.