ஆசைக்கு இணங்காத இளம்பெண்ணை சுத்தியால் அடித்துக் கொன்ற கொத்தனார்!

ஆசைக்கு இணங்காத இளம்பெண்ணை சுத்தியால் அடித்துக் கொன்ற கொத்தனார்!



Koththanar killed sithal in Chennai

சென்னை கேகே நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் தனது பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக கட்டிட மேஸ்திரி சந்துரு என்பவரை நியமித்துள்ளார். இதனையடுத்து திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் மற்றும் கட்டிட மேஸ்திரி சந்துரு ஆகியோர் கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளனர்.

chennai

மேலும், இவர்களுடன் எம்ஜிஆர் நகர் சூலை பள்ளம் பகுதி சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவிய சரண்யா சித்தாள் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் மாலை வேலை முடிந்த பிறகு கொத்தனார் வேல்முருகன், சித்தாள் சரண்யாவிடம் தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சரண்யா, கொத்தனாரை எச்சரித்து வெளியே சென்று அசிங்கப்படுத்தி விடுவேன் என கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த வேல்முருகன் கையில் வைத்திருந்த சுத்தியலால் சரண்யாவின் பின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சரண்யா ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

chennai

இதனையடுத்து வேல்முருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டை சுற்றி பார்க்க வந்தபோது, சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கொத்தனார் வேல்முருகனை திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர்.