திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!



in Trichy 32 Year Old Girl Suspect to Rape and Murder 

32 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் பலாத்காரம் & கொலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பெண் மாயம்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் இருக்கும் கிராமத்தில் 32 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினத்தில் இளம்பெண் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் மாட்டுக்கொட்டகைக்கு வைக்கோல் வைக்கச் சென்றுள்ளனர். பின் இரவு நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. வீட்டுக்கு வந்த தந்தை குழந்தைகளிடம் அம்மா குறித்து கேட்டுள்ளார்

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!

அதிகாரிகள் விசாரணை:

பின் மாட்டுக்கொட்டகைக்குச் சென்று பார்த்தபோது மனைவி இல்லை. இதனால் அக்கம் பக்கத்தில் தேடத்தொடங்கி இருக்கிறார். நல்லுறவும் பெண் குறித்த தகவல் கிடைக்காத காரணத்தால், காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் பெண்ணின் உடல் ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. 

Crime news

பலாத்காரம் & கொலை?

அரைநிர்வாண கோலத்தில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!