சமூக ஆர்வலருக்கு இப்படியா விதி முடியனும்? விபத்தில் நேர்ந்த சோகம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா (வயது 42). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் விநாயகர் கோவிலில், பகுதிநேர கணக்காளராக இருந்து வருகிறார்.
மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெறுவது, சட்டத்தை மீறுவோர் தொடர்பான புகார் கொடுப்பது, பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக புகார் அளித்தல், இல்லாதோருக்கு உதவி செய்தல் என சமூக ஆர்வலராக இவர் இருந்து வந்துள்ளார்.
விபத்தில் சிக்கி பலி
இந்நிலையில், சம்பவத்தன்று உடன்குடி பகுதியில் இருந்து குலசேகரப்பட்டினம் நோக்கி சுப்பையா இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது, வழியில் நின்ற காரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதையும் படிங்க: தாய் - மகள் கொலை., நகைகள் மாயம்.. தூத்துக்குடியில் கொடூரம்.!
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பையா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்புள்ள போயிட்டான், கொன்னவன் வீட்டுக்கு பாதுகாப்பா? - தாயின் கண்ணீர் குமுறல்.. திணறித்தவித்த காவல்துறை.!