சென்னை: சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம்: ஆபாச வீடியோ பகிர்ந்தவர் கைது.!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமி, அவரின் சொந்த பெற்றோரால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். மேலும், சிறுமியின் அந்தரங்க விடியோவை பதிவு செய்து, அதனையும் விற்பனை செய்து பிணமாக்கியது நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோர் கைது
விசாரணையில், சிறுமியை பாலியல் தொழிலாளியாக வற்புறுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, சிறுமியின் ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து பகிர்ந்ததாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சென்னை: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி: வீடியோ எடுத்து சம்பாத்தியம் பார்த்த பெற்றோர்.!
ஆபாச வீடியோ பகிர்ந்தவர்கள் கைது
தம்பதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போனை ஆய்வு செய்தபோது, அதில் சிறுமியை தவிர்த்து பிற 6 சிறுமிகளின் ஆபாச படமும் இருந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி தோழிகள் என்பது தெரியவந்தது. இதனால் அதுதொடர்பான விபரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டபோது, அவரை பலாத்காரம் செய்த நபர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை: ஜிம்முக்கு வந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்; பயிற்சியாளர் கைது.!