மனைவி பிரிந்து சென்ற சோகம்.! வீடியோ வெளியிட்டு கணவன் செய்த துயர சம்பவம்!

மனைவி பிரிந்து சென்ற சோகம்.! வீடியோ வெளியிட்டு கணவன் செய்த துயர சம்பவம்!



husband suicide for wife leave


வேலூர் மாவட்டம் கீழ்மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்த அஜய்குமார். இவருக்கும், அர்ச்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். 

இதனையடுத்து, கீழ்மொணவூரில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் அஜய்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் அர்ச்சனாவுக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதனால், அவரது தாய் வீட்டில் ஓய்வெடுக்கச் செல்வதாக கூறி சென்றுள்ளார் அர்ச்சனா. ஆனால் தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அஜய்குமார் மாமியார் வீட்டிற்கு சென்று அழைத்துள்ளார்.

suicide

ஆனால் அர்ச்சனா வரமறுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அஜய்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு செய்த அவர் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அதனை அனுப்பியுள்ளார். 

அஜய்குமாரின் வீடியோவைக் கண்ட உறவினர்கள் அஜய்குமாரின் வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் அஜய்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.