திருமணமாகி குழந்தை இல்லாததால் வேறு நபரை திருமணம் செய்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு.!

திருமணமாகி குழந்தை இல்லாததால் வேறு நபரை திருமணம் செய்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு.!


husband-died-for-wife-second-marriage

நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34). இவருக்கும் அஜிதா (32) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கதிரவன் அதிர்ச்சியில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்ற கதிரவன் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

marriageஇதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிரவனின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.