24 வயது இளைஞர்.. 42 வயசு பெண்.. கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்த கள்ளக்காதல்.. கடைசியில் நடந்த சோகம்

24 வயது இளைஞர்.. 42 வயசு பெண்.. கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்த கள்ளக்காதல்.. கடைசியில் நடந்த சோகம்


Girl strapped man over illegal relationship issue near Kotaikaanal

கணவனை இழந்த பெண்ணுடன் இளைஞர் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டுவந்தநிலையில் அந்த பெண் அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பிரதீப்(24). ஓட்டுநராக பணிபுரிந்துவரும் இவருக்கும், அவரது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த பிரமீளா (42) என்ற பெண்ணிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பிரமீளாவின் கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதால் எந்த ஒரு தடையும் இல்லாமல் தனது கள்ளக்காதலை பிரதீப்புடன் சேர்ந்து வளர்த்துவந்துள்ளார் பிரமீளா.

இந்நிலையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பிரதீப்பின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் அவருக்கு திருமணம் செய்ய அவசர அவசரமாக பெண் பார்த்துள்ளனர். இந்த விவரம் பிரமீலாவுக்கு தெரியவர அவர் ப்ரதீபிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் ஒருவழியாக இருவரும் சமாதானம் அடைந்தநிலையில் மீண்டும் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதீப்பின் குடும்பத்தினர் அவருக்கு மீண்டும் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த விவரம் பிரமீலாவுக்கு தெரியவர அவர் பிரதீப்பிடம் சண்டை போட்டுள்ளார். நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனவும், தன்னை திருமணம் செய்துகொண்டு இதே வீட்டில் குடும்பம் நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமீளா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரதீப்பை சரமாரியாக வெட்டியுள்ளார். பிரதீப்பின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரமீளாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.