தமிழகத்தில் இப்படியா..! பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த கயவர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!
தமிழகத்தில் இப்படியா..! பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த கயவர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில், பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது
வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர். இதனையடுத்து படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.
அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது. ஏற்கனவே அந்த ஆட்டோவில் சில நபர்கள் இருந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் இது சேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர். பின்னர் எங்கே போகவேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் கேட்டுள்ளார். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் அங்கிருந்து வேகமாக புறப்பட்ட ஆட்டோ வேறு பாதையில் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.
வேகமாக சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. அங்கு செல்லும் வரை ஆட்டோவில் அமைதியாக இருந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டத் தொடங்கினர். பின்னர் பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர். மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை. இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மருத்துவ ஊழியர்கள் 2 பேரை ஆட்டோவில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தொடர்ந்து அவர்களின் செல்போன் மற்றும் ரூ 40 ஆயிரம் பணத்தை பறித்தது தெரியவந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பெண் மருத்துவர் ஆன்லைனில் புகார் அளித்த நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.