என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
புளியமரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி; விருத்தாசலத்தில் சோகம்.!
புளியமரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி; விருத்தாசலத்தில் சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், கொடுக்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் புளியமரத்தில் புளி எடுக்க ஏறி இருக்கிறார்.
அச்சமயம், எதிர்பாராத விதமாக சாமிக்கண்ணு மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் சாமிக்கண்ணுவை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக சாமிக்கண்ணுவின் மகள் சாந்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.