திருமண நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு சாப்பிட்டு 2 பேர் மரணம்; அடுத்தடுத்து நடந்த சோகம்.!



Cuddallore Kullanjavadi 2 Death 


கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி, புலியூர் கிராமத்தில் வசித்து வரும் இலங்கைக்கும், பள்ளிநீர் ஓடை கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 03 ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது. குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

திருமணத்தில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு:

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவுகளும் பரிமாறப்பட்ட நிலையில், காலை உணவை சாப்பிட்ட புலியூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 61), ராஜ்குமார் (வயது 27), சுதாகர் (வயது 33), உக்கிரமூர்த்தி (வயது 62), கண்ணன் (வயது 42), பழனிவேல் (வயது 50) உட்பட 20 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர்.

வாந்தி - மயக்கத்தால் அவதி: 

இதனையடுத்து, இவர்கள் அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த திருவேங்கடம் என்ற நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அடுத்தடுத்து 2 பேர் பலி:

அதனைத்தொடர்ந்து, நேற்று புலியூரை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் நாராயணசாமி என்ற களிகானம் (வயது 55) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து குள்ளஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.