குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பரவல்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பரவல்!

ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் சென்னையில் நேற்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 121 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,392 பேர் ஆண்கள், 666 பேர் பெண்கள். கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மேலும் ஊரடங்கை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.