நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!



ravi-mohan-aarthi-divorce-case-court-order

நடிகர் ரவி மோகன் மற்றும் நடிகை ஆர்த்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், ரவிமோகன் பாடகி கெனிஷாவுடன் தோழியாக கலந்துகொண்ட நிகழ்வு, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக மௌனமாக இருந்த ஆர்த்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், தனது குடும்ப வாழ்வில் இருளை ஏற்படுத்திய மூன்றாவது நபராக கெனிஷாவை மறைமுகமாக குற்றம் சாட்டினார். இதனால், இருவருக்கும் இடையே கடுமையான குற்றச்சாட்டு போர் வெளிப்பட்டது.

Ravi Mohan Aarthi divorce case

இந்த பின்னணியில், தனது மீது அவதூறு கருத்துகள் வெளியிட்டதாகக் கூறி, நடிகர் ரவி மோகன், ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் முக்கியமான உத்தரவை வழங்கியது.

இதையும் படிங்க: அச்சத்தில் மக்கள்! மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா..? சுகாதாரத்துறை அளித்த விளக்கம்...

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

1.இருவரும் இனிமேல் எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது.

2.சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் அவதூறு கூறக்கூடாது.

3.ஏற்கனவே வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவுகள் நீக்கப்பட வேண்டும்.

4.இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவர் தொடர்பான தகவல்களை பகிரக்கூடாது.

5.இந்த உத்தரவை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாகவும், கடந்த கால பதிவுகளை நீக்குவதாகவும் தெரிவித்தனர்.

 

 

இதையும் படிங்க: பிரபல சீரியல் நடிகையின் அழகிய குழந்தைபருவ புகைப்படம் வைரல்! அந்த நடிகை யார் தெரியுமா?