வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன்கள்.. அதிரடியாக மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன்கள்.. அதிரடியாக மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!



citizens-who-entered-the-house-wrapped-up-the-robbers-a

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள சிவக்குமார் நகரில் ஆளில்லாத வீடு ஒன்று உள்ளது. இதனை நோட்டமிட்ட கொள்ளையன்கள் கொள்ளையடிப்பதற்காக அந்த வீட்டிற்கு சென்று உள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைவதை கண்ட அப்பகுதி மக்கள் விரைவாக சென்று அந்த வீட்டின் முன் கதவிற்கு பூட்டு போட்டு உள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

robbers

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சிக்கிக்கொண்ட அந்த 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.