தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?... சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?... சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai RMD Weather Update Today

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக, 27 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். பிப். 28 ஆம் தேதி தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் 2 ஆம் தேதியில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யும். 

தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3 ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யலாம். 

chennai

தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக பிப். 27 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். அதேபோல தென்கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டியுள்ள அந்தமான் பகுதி, தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மன்னார்வளைகுடா, தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.