அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
3 மணிநேரத்திற்கு மிககனமழை பெய்யப்போகும் மாவட்டங்கள் இதுதான்.. மக்களே உஷார்.!
3 மணிநேரத்திற்கு மிககனமழை பெய்யப்போகும் மாவட்டங்கள் இதுதான்.. மக்களே உஷார்.!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உட்பட 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வரும் 3 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வரும் 3 மணிநேரத்திற்கு பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.