வங்கியில் 1,156 கிராம் நகைகளை விட்டுச்சென்ற பர்தா பெண்! 5 நாட்கள் கழித்தும் யாரும் வரல.... கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்! சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!!!
சென்னையில் தனியார் வங்கியில் கிடந்த கோடிக்கணக்கான தங்க நகைகள் வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிளை மேலாளர் கண்டெடுத்த நகைகள் தொடர்பான விசாரணையில், அதே வங்கியின் முன்னாள் ஊழியரே முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் அவரை கைது செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வங்கியில் கிடந்த நகைகள்:
சென்னையில் செயல்படும் ஒரு தனியார் வங்கியின் கிளை மேலாளரான அகமது காதிரி, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வங்கி வளாகத்தில் கிடந்த ஒரு மணிபர்ஸைக் கண்டெடுத்தார். அதை திறந்து பார்த்தபோது, சுமார் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சக ஊழியர்களிடம் விசாரித்தும் உரிய தகவல் கிடைக்காததால், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த பர்ஸை தவறவிட்டு சென்றது உறுதியானது.
இதையும் படிங்க: கவரிங் கடையில் நகையை திருடி அசிங்கப்பட்ட திமுக புள்ளி! சிசிடிவி மூலம் அடையாளம்! பகீர் சம்பவம்!
5 நாட்கள் கழித்தும் யாரும் வராததால் போலீஸ் விசாரணை
நகைகளை தேடி ஐந்து நாட்கள் கடந்தும் யாரும் முன்வராததால், மேலாளர் அகமது காதிரி சென்னை மத்திய குற்றப்பிரிவு (EDF-3) போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் போது, அந்த நகைகளை தவறவிட்டவர் பத்மபிரியா என்ற முன்னாள் வங்கி ஊழியர் என்பதும் உறுதியானது. இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னர் திருடிய நகைகளை மீண்டும் வைக்க முயன்ற திட்டம்
போலீஸ் விசாரணையில், பத்மபிரியா மீது ஏற்கனவே வங்கியின் லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகளை திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும், அதில் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், திருடிய நகைகளை மீண்டும் லாக்கரில் வைத்து சந்தேகம் தவிர்க்கவே அவர் வங்கிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
தன்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்த அவர், திட்டமிட்டபடி நகைகளை வைக்க முடியாமல் பதற்றத்தில் அவற்றை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர் மேலாளர் அளித்த புகாரின் மூலம் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பத்மபிரியா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மேற்கொண்டிருக்கக்கூடிய பிற முறைகேடுகள் குறித்தும் போலீஸார் விசாரணை விரிவுபடுத்தியுள்ளனர். வங்கி பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் புதிய கேள்விகள் எழுந்துள்ளன.