Breaking#: ரூ.2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி வழக்கு! நாளை விசாரணை

Breaking#: ரூ.2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி வழக்கு! நாளை விசாரணை


Case filled against distributing 2000 amount to tn people

இம்மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2000 ஏற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 110 விதியின் கீழ் ரூ.2,000 வழங்கப்படும் அறிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.