முன்னாள் ஆசிரியர் மாணவிக்கு செல்போன் பரிசு கொடுத்து பாலியல் தொந்தரவு! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!



student-harassment-teacher-cuddalore-pocso-case

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்ற ஒருவர், கடந்த காலத்தில் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியிருந்தார். தற்போது அவர் ஒரு மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

இந்நிலையில், அவர் முன்பு பணியாற்றிய அதே பள்ளியில் தற்போது 11-ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். மாணவிக்காக செல்போன் வாங்கிக் கொடுத்து, அதை  தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

school girl harassment news

மாணவியின் தற்கொலை முயற்சி

இந்த துன்பம் தாங்க முடியாத அளவுக்கு மாணவி உணர்ந்ததால், வீட்டில் இருந்த டீசலை குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: பணக்காரர் ஆக ஆசைப்படுறீங்களா? இந்த 7 தந்திரம் தெரிஞ்சு வச்சுக்கோங்க...

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இப்படி பண்ணுங்க! தொட்டி ரோஜா செடியில் கூட கொத்து கொத்தாய் ரோஜா பூக்குமாம்! சூப்பர் டிப்ஸ் இதோ...