விமானத்தில் பயணிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க....

அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறந்தவண்ணம் கீழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகியது. இந்தச் சம்பவத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விஷ்வகுமார் என்ற இளைஞர் ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
விமானம் தரையை நோக்கி வேகமாக விழும் போதே, முன்பகுதியிலிருந்த அவசரவழி அருகில் அமர்ந்திருந்த விஷ்வகுமார், துரிதமாக செயல்பட்டு குதித்து தப்பினார். இதன் மூலம் அவர் இன்று உயிருடன் இருக்கிறார்.
இந்தச் சம்பவம், விமானப் பாதுகாப்பு விதிகள் பற்றி நாம் தவறாமல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுபற்றி விரிவாக பார்ப்போம்.
இதையும் படிங்க: விமான விபத்தில் யாரையும் காப்பாற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா? டாக்டரின் கனவு கருகி ஒட்டு மொத்த குடும்பமும் பலி..!
விமானத்தில் பயணிக்கும்போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
1. சீட் பெல்ட் அணிய வேண்டும்
விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன்பே, சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். பல காயங்கள், இது செய்யப்படாததால் ஏற்படுகிறது.
2. பாதுகாப்பு அறிவுரைகள் கேட்க வேண்டும்
விமான ஊழியர்கள், புறப்படும் முன் கூறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கவனமாக கேட்க வேண்டும். அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் இதில் இடம் பெறும்.
3. நிலை தடுமாறும் போது எழுந்து நடக்க வேண்டாம்
விமானம் குலுங்கும் போதும், கழிவறை செல்லும் பொது கூட உடனே சீட்டிற்கு திரும்ப வேண்டும். இடையில் என்னுடைய நிலையை நிலைப்படுத்த சுவர் அல்லது பிடிக்க ஏதுவான பொருள் பயன்படுத்தலாம்.
4. விமான டிக்கெட் எங்கே புக் செய்ய வேண்டும்?
விபத்துகள் குறைவாக நிகழும் விமான நிறுவனங்களைத் தேர்வு செய்வது நன்று. விமான நிறுவனங்களின் முனைவை வைத்து பாதுகாப்பு தரம் மற்றும் விமான துறை மதிப்பீடுகள் அடிப்படையாக இருக்க வேண்டும்.
5. அவசர வழி எங்கு இருக்கிறது?
உங்களது இருக்கையிலிருந்து அவசர வெளியேறும் வழி எங்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். இது அத்தியாவசியம்.
6. அழைப்பு பொத்தான்
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், விமான ஊழியர்களை அழைக்கும் பொத்தானை அழுத்தலாம். எந்த நேரமும் உதவிக்கு அவர்கள் வருவார்கள்.
7.விமானத்தில் நெருப்பும் புகையும் ஏற்பட்டால்
ஆக்சிஜன் மாஸ்க் கீழே விழும்; முதலில் உங்களுக்காக அதை அணியுங்கள்.
பிறகு, மற்றவர்களுக்கு உதவுங்கள்.
புகை அதிகம் ஏற்பட்டால், உங்கள் மூக்கை துணியால் மூடிக்கொள்ளுங்கள்.
8.தாக்கங்களை சமாளிக்க தயாராக இருங்கள்
விமான ஊழியர்கள் கூறும் போது, தயார் நிலைக்குச் செல்லுங்கள்:
சாய்ந்து குனிந்து உட்காரவும்
கைகளை தலைமீது வைத்து, கழுத்தை பாதுகாக்கவும்
கால்களை சேர்த்து, தரையில் நிலையாக வைத்துக்கொள்ளவும்
இந்த விதிமுறைகள், ஒரு விபத்திலும் உங்கள் உயிரை பாதுகாக்க முடியும். விஷ்வகுமாரின் சூழ்நிலையைப் போல, ஒரு சிறிய கவனம் கூட வாழ்க்கையை மாற்றக்கூடியதாக அமையலாம்.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்தில் முன்னாள் முதல்வர், கணவரை முதல்முறை பார்க்க சென்ற புதுமணப் பெண் பலியாகினர்! நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம்...