சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
பிரம்மாண்டமான துவக்கம்.! ஜீ தமிழ் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு.! என்ன? எப்போனு பார்த்தீங்களா.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. நடனம், பாடல் என பல திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
சரிகமப ஜூனியர் சீசன்
அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடந்து வந்த சரிகமப சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்தது. இறுதி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த சீசனில் திவினேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அவர் ஒன்னும் வெறும் காலோடு போகல.! மனசு வலிக்குது.! ஆதங்கத்துடன் ஆர்த்தி ரவி வெளியிட்ட இறுதி அறிக்கை!!
பிரமாண்ட துவக்கம்
அதாவது சரிகமப ஜூனியர் சீசன் முடிவடைந்த சில நாட்களிலேயே சரிகமப சீனியர்களுக்கான சீசன் 5 குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சரிகமப சீனியர் சீசன் 5 மே 24ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அர்ச்சனாகவும், நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, கார்த்திக் மற்றும் விஜய் பிரகாஷ் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. இரத்தக் காயங்களுடன் தமிழ் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!