அடக்கடவுளே.. இரத்தக் காயங்களுடன் தமிழ் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

பிரபல தமிழ் நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்தக்காயங்களுடன் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளுள் ஒருவர் ராஷிகண்ணா. இவர் பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினாலும், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்புடன் நடித்து வரும் நடிகை, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதும் இவர் வழக்கம்.
இதையும் படிங்க: மீனாட்சியின் அருளைப்பெற்ற விஜய்.. ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கிப்ட்.!
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்தவர், "சில கதாபாத்திரங்கள் உடல், உயிர், காயம் என அனைத்தையும் கேட்கும். புயலாக மாறும்போது இடியை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்த ரசிகர்கள் அவரை சற்று பார்த்து கவனமாக இருக்கும்படி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!