காதலன் மிரட்டியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசார் தீவிர விசாரணை!

காதலன் மிரட்டியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசார் தீவிர விசாரணை!



Boy blackmail girlfriend get suicide

சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. இவரது தந்தை சில வருடங்களுக்கு முன்பு காலமானதால், அம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் தனியார் மகளிர் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

chennai

இந்த நிலையில் மாணவி கிருஷ்ணகுமாரி கொளத்தூர் பகுதியில் சேர்ந்த விக்கி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதில் காதலர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாணவி விக்கியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்கி இருவரும் நெருங்கி பழகிய போது எடுத்த புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் அச்சுமடைந்த மாணவி கிருஷ்ணகுமாரி வீட்டில் இருந்த பினாயிலை குடித்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

chennai

இதில், தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியிடம் நீதிபதி நேரில் சென்று மரண வாக்குமூலம் பெற்றார்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி கிருஷ்ணகுமாரி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.