முதல்வர் விஜய்க்கு எதிராக திடீரென எகிறிய அண்ணாமலை! தவெக அரசுக்கு வந்த முதல் பெரிய நெருக்கடி.... அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி!!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது கவலைக்குரியதாக இருப்பதாக 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேர்தலின்போது அளிக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி வாக்குறுதி முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியை நம்பியே மக்கள் ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது அரசு, 75 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #சற்று முன் : மக்களே மகிழ்ச்சி செய்தி.... தமிழகத்தில் அனைவருக்கும் கடன் தள்ளுபடி... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!!
சேலத்தில் விவசாயிகள் போராட்டம்
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த போராட்டம், விவசாய சமூகத்தின் ஏமாற்றத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
1970 சம்பவத்தை நினைவுகூர்ந்த அண்ணாமலை
மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை நீடிப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான கடன் தள்ளுபடி கோரிக்கை
பெயரில் மட்டும் மாற்றத்தை காட்டாமல், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க் கடன் முழுவதையும் எவ்வித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சற்று முன்... ஹாப்பி நியூஷ்! கடன் முழுவதும் தள்ளுபடி.... முதல்வர் விஜய் அறிவித்த புதிய அறிவிப்பு.!!!