எல்லாம் நல்லா தான் இருக்கு! எப்படி ஒரு முதல்வரால் வாய் கூசாமல் பத்திரிகையாளர் இப்படி சொல்ல முடிகிறது? அதிமுக வெளியிட்ட கண்டன வீடியோ....



aiadmk-criticises-stalin-flood-response

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், இது குறித்து அரசின் நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல குடும்பங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த நிலையில் அவர்களின் குரல் உரிய முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் பதிலை கடுமையாக விமர்சித்த அதிமுக

அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தொடர்ந்து பெய்துக்கொண்டிருக்கும் கனமழையால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கண்ணீர் மல்கியிருக்கும் நேரத்தில், ‘எல்லாம் நன்றாக தான் உள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுவது எப்படி?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்களின் துயரத்தை உணராத வெறும் ‘பொம்மை முதல்வர்’ என்று குறிப்பிட்ட அதிமுக, “இவ்வாறு உணர்ச்சி அற்ற வகையில் பதிலளிப்பது ஸ்டாலின் ஒருபோதும் மக்களின் வலியை உணரவில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது” என கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?

மாற்றம் தேவை – அதிமுக கோரிக்கை

“உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததே மக்களின் பெரும் தவறு என நினைக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் ஆட்சி காலம் எஞ்சியுள்ள நிலையில், பொறுப்புள்ள தலைவராகச் செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அணுக வேண்டியது அவசியம்” என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

மக்களின் ஆழ்ந்த துயரங்களை உணர்ந்து தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக அறிக்கை நிறைவடைந்துள்ளது. இயற்கை சீற்றத்தின் நேரத்தில் அரசின் பதில் மக்களால் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: DMK... இந்த அரசாங்கம் உருட்டு கடை அல்வா தான் தருது.! 525 அறிவிப்புகள்… 10% கூட நடக்கல! எடப்பாடி பழனிசாமியின் நக்கல் பேச்சு விமர்சன வீடியோ!