வயிற்றுப்புண்ணுக்கு நிரந்தர தீர்வு.. ருசியான ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் இனி கோழி இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. மேலும் ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சியை உண்பதன் மூலம் உடல் சூட்டை தணிக்க இயலும். அதிலும் ஆட்டு குடல் சமைத்து அடிக்கடி சாப்பிடுவது வயிற்றுப் புண்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. இச்செய்தி தொகுப்பில் ஆட்டுக்குடல் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்குடல்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவியது - ஒரு கப்
தக்காளி - 150 கிராம்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
சீரகம், சோம்பு - ஒரு ஸ்பூன்
பட்டை, இலவங்கம் - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
நல்லெண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை, கருவேப்பிலை - சிறிதளவு
இதையும் படிங்க: கத்தரி வெயிலை நினைச்சு கவலைப்படாதீங்க.. அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை.!!
செய்முறை
முதலில் ஆட்டுக்குடலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு, சின்ன வெங்காயம், தேங்காய் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்பு, சீரகத்தூளை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதி வந்ததும், குடலை சேர்த்து 19 - 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிட வேண்டும். இறக்கும் தருவாயில் தேங்காய் மற்றும் மல்லித்தழை தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான ஆட்டுக்குடல் குழம்பு தயார்.
இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!