கத்தரி வெயிலை நினைச்சு கவலைப்படாதீங்க.. அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை.!!

கத்தரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம், மே மாதம் நான்காம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 20-க்கும் மேற்பட்ட நாட்களுக்கு கடும் வெயிலானது மக்களை வாட்டி வதைக்க உள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே மாதம் 5-ஆம் தேதி மற்றும் 6-ஆம் தேதியில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மே மாதம் ஐந்தாம் தேதி கனமழை பெய்யும்.
இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!
10 மாவட்டங்களில் கனமழை
அதே போல ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மே மாதம் 6-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. தகுதிகள் என்ன?.!