கத்தரி வெயிலை நினைச்சு கவலைப்படாதீங்க.. அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை.!!



summer rain alert for 10 district in tamilnadu

கத்தரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம், மே மாதம் நான்காம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 20-க்கும் மேற்பட்ட நாட்களுக்கு கடும் வெயிலானது மக்களை வாட்டி வதைக்க உள்ளது. 

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே மாதம் 5-ஆம் தேதி மற்றும் 6-ஆம் தேதியில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மே மாதம் ஐந்தாம் தேதி கனமழை பெய்யும். 

இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் நேருக்குநேர் மோதி கோரவிபத்து.. 4 பேர் பலி.!!

Summer rain

10 மாவட்டங்களில் கனமழை

அதே போல ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மே மாதம் 6-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. தகுதிகள் என்ன?.!