அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... காவல்துறை வழக்கு பதிவு செய்து டிரைவர் கைது.!

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... காவல்துறை வழக்கு பதிவு செய்து டிரைவர் கைது.!



a-young-woman-was-sexually-molested-in-a-government-bus

அரசு பேருந்தில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில்  பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்  வேலை நிமித்தமாக அரசு பேருந்தில் ஈரோடு சென்று இருக்கிறார். ஈரோடு பேருந்து நிலையம் வந்ததும் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கின்றனர்.

tamilnaduஇந்த இளம் பெண் இறங்க முற்பட்டபோது  அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அரசு பேருந்து ஓட்டுனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது தொடர்பாக ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

tamilnaduஇந்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரான பிரபாகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணிடம் அரசு பேருந்து ஓட்டுனர் பாலியல் சீண்டலில்  ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.