கழுத்து...பிறப்புறுப்பு... கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்ட 6 மாத கர்ப்பிணி மனைவி!... அதன் பிறகும் அரங்கேற்றிய குரூரம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியைச் சார்ந்தவர் சந்தானம் இவர் மேஸ்திரி ஆக வேலை செய்து வந்தார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சந்தானம் அதே பகுதியைச் சார்ந்த விதவை பெண்ணான வெண்பா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வெண்பாவிற்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரு வீட்டார் சமாதானம் பேசி இருவரையும் ஒன்றாக சேர்ந்து வாழ வைத்திருக்கின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வெண்பா தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்து இருக்கிறார்.
அவர் இறந்த பிறகும் ஆத்திரம் தீராததால் கத்தியை எடுத்து அவரது கழுத்து மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றையும் அறுத்துள்ளார். இதன் பிறகு தன்னை காவல்துறை பிடித்து விடுமோ என்ற பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.