ஒருதலைக் காதலால் விபரீதம்: காதலை ஏற்காத இளம் பெண்ணின் வீட்டு வாசலில் தீக்குளித்த வாலிபர்..!

ஒருதலைக் காதலால் விபரீதம்: காதலை ஏற்காத இளம் பெண்ணின் வீட்டு வாசலில் தீக்குளித்த வாலிபர்..!



A teenager set fire to the door of a young woman who did not accept love due to one-sided love

விருதுநகர் மாவட்டம், டி.காமராஜர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவில் பிச்சை. இவர் ஒரு விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24). இவர் துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவகுமாருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த அவரது பெற்றோர் அவருக்கு ஏற்ற வரன் பார்த்து வந்துள்ளனர். இதனையறிந்த தேவகுமார், தனது பெற்றோரிடம் தான் காதலிப்பது குறித்து கூறியதுடன் மணந்தால் அவரைதான் மணப்பேன் என்றும் பெண் தேடும் முயற்சியை கைவிடுமாறும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, வேலைக்கு விடுமுறை எடுத்த தேவகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதன் பின்னர் தான் காதலித்து வந்த பெண்ணை சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளார். அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துடன், வேறொரு பெண்ணை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக மனமுடைந்த தேவகுமார், கடந்த வியாழக்கிழமை அன்று காதலித்த பெண்ணின் வீட்டு வாசலில் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அளித்தும்  தேவகுமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கோவில்பிச்சை அளித்த புகாரின் அடிப்படையில் வாச்சக்காரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.