மச்சானை 18 இடங்களில் கொடூரமாக வெட்டி கொன்ற மனைவியின் சகோதரன்... காவல்துறை வலைவீச்சு.!

மச்சானை 18 இடங்களில் கொடூரமாக வெட்டி கொன்ற மனைவியின் சகோதரன்... காவல்துறை வலைவீச்சு.!



a-man-murder-his-sister-alcoholic-husband-police-search

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் தனது சகோதரியின் கணவரை  மச்சானே வெட்டி படுகொலை செய்த சம்பவம்  சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்  துரைமுருகன் மகன் சிவ சூரியா வயது 25. இவரும்  சாத்தான்குளம் வடக்கு ராதை வீதியைச் சேர்ந்த  சங்கரன் என்பவரது மகள் முத்துலட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கொத்தனார் வேலை செய்பவரான சிவசூரியா மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு என தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்திருக்கிறது.

tamilnadu

அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து சிவ சூர்யா மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதால்  அவர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். மேலும் சிவ சூர்யாவை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் முத்துலட்சுமி. இந்நிலையில் சிவ சூர்யா அடிக்கடி தனது மனைவியின் சகோதரரான வெங்கடேஷிற்கு ஃபோன் செய்து முத்துலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு  கேட்டிருக்கிறார்.

சம்பவ தினத்தன்று மது போதையில் இருந்த அவர் தனது மச்சான் வெங்கடேஷிற்கு ஃபோன் செய்து முத்துலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சிவ சூர்யாவின் வீட்டிற்கு வந்து அவரை அரிவாள்  கொண்டு 18 இடங்களில் வெட்டிவிட்டு அவரது வீட்டையும் வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார். சம்பவம் தொடர்பாக சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கடந்து இருக்கிறார் சிவ சூர்யா. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம்  சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்த போதும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் சிவசூரியா. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை  தப்பி ஓடிய வெங்கடேச தீவிரமாக தேடி வருகிறது. குடும்ப தகராறில் சொந்த மச்சானையே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.