அட பாவி மனுஷனுங்களா... 74 வயது பாட்டியை ஏமாத்திடீங்களே டா..! அக்கறை காட்டி 9 பவுன் நகைகளை அபேஸ் செய்த கயவர்கள்.!

அட பாவி மனுஷனுங்களா... 74 வயது பாட்டியை ஏமாத்திடீங்களே டா..! அக்கறை காட்டி 9 பவுன் நகைகளை அபேஸ் செய்த கயவர்கள்.!



9-pound-jewelery-theft-from-old-women

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையப்பட்டி சங்கரன்குண்டு தெற்கு வீதியில் வசித்து வருபவர் விசாலாட்சி. 74 வயது நிரம்பிய இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் விசாலாட்சியிடம் சென்று, பாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பக்கத்துல திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. நீங்க வேற நகை அதிகமா போட்டுருக்கீங்க கவனமா இருங்க என கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பாட்டியிடம் ஒரு பையை கொடுத்து, நீங்கள் அணிந்திருக்கும் நகையை இதில் பத்திரமாக வைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள் எனக்கூறி ஒரு பையை கொடுத்துள்ளனர். பின்னர் இருங்க பாட்டி நாங்க உதவி செய்கிறோம் என கூறி அவர்களே மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, வளையல் 4 பவுன் உள்ளிட்ட 9 பவுன் நகைகளை பையில் வைத்து தருவதாக கூறி வாங்கி பையை திரும்பவும் கொடுத்துள்ளனர்.

இந்த காலத்திலும் இப்படி நல்லவர்கள் உள்ளனரே என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பாட்டி . வீட்டிற்கு வந்ததும் பையை பார்த்தபோது அதில் மண்ணும், கல்லும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பேரதிர்ச்சியடைந்த அந்த பாட்டி உடனடியாக பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.