நான் உன் புருசன்டி.. தப்பில்லை‌‌... 14 வயது சிறுமியுடன் நாடககாதல், பலாத்காரம்... பதறிப்போன தாய்..!

நான் உன் புருசன்டி.. தப்பில்லை‌‌... 14 வயது சிறுமியுடன் நாடககாதல், பலாத்காரம்... பதறிப்போன தாய்..!



10th standard girl harassed by a boy

பத்தாம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பால அருணாச்சலம் தெருவில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலை நேரத்தில் வீட்டுக்கு திரும்ப தாமதமாகியுள்ளது. 

பின் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் தாயார் விசாரிக்கையில், ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்க்கும், சிறுமிக்கும் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தது தெரியவந்தது.chennaiசிறுமியை நாடகத்தில் வீழ்த்திய காமுகன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.