10-ஆம் வகுப்பு மாணவிக்கு... குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்... இளைஞர் கைது...!

10-ஆம் வகுப்பு மாணவிக்கு... குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்... இளைஞர் கைது...!


10th class student...raped by mixing anesthetic in cold drink...youth arrested...

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி அங்கு மயங்கி விழுந்துள்ளார். மேலும் சில நாட்களாகவே மாணவி மிகவும் சோர்வாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள் அந்த மாணவியை விசாரித்த போது, வீட்டின் உரிமையாளர் மகன் விக்கி என்பவர் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்தார்.

உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் விக்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது விக்கி அவரை தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர் வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

இதனை பயன்படுத்திக் கொண்ட விக்கி மாணவியுடன் நெருக்கமாக பழகி, அவரை வலுக்கட்டாயமாக பைக்கில் அதே பகுதியில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நண்பரின் வீட்டில் வைத்து மாணவிக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபோல் பலமுறை விக்கி அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி மாணவியிடம் அவரது பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். எனவே இது தொடர்பாக மாணவி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

தற்போது பள்ளியில் மயங்கி விழுந்ததால் இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. இந்நிலையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் விக்கியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.