நாளை வியாழக்கிழமை இந்த ஒரு காரியம் குரு பகவானின் அருளை தந்து யோகத்தை உண்டாகும்.!



Thursday Special A Simple Ritual to Seek Guru Bhagavans Blessings

வியாழக்கிழமை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் குளித்து, மஞ்சள் நிற ஆடை அணிந்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என்று ஆன்மீக நம்பிக்கை உள்ளது. குறிப்பாக கல்வி, திருமணம், வேலை மற்றும் செல்வ வளம் வேண்டி பலர் வியாழன் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

கோவிலுக்கு செல்ல முடிந்தால் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவான் சன்னதியில் மஞ்சள் மலர் சாத்தி, கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்பு நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். வீட்டிலேயே தீபம் ஏற்றி "ஓம் ப்ரிம் ப்ருஹஸ்பதயே நம:" என்ற மந்திரத்தை 108 முறை ஜபிப்பதும் நல்லதாக கருதப்படுகிறது.

Thursday special

வியாழக்கிழமையில் மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் குங்குமம், மஞ்சள் பழங்கள் அல்லது கொண்டைக்கடலை போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்குவது புண்ணியமாக கருதப்படுகிறது. இதனால் குரு பகவானின் அருள் கிடைத்து குடும்பத்தில் அமைதியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இதையும் படிங்க: 2026 அட்சய திருதி நாளில்.... இதை மட்டும் மறக்காம செய்யுங்க! குபேர யோகம் உங்கள் வீடு தேடி வரும்! செல்வ வளமும் நிம்மதியும் பல மடங்கு... பலரும் அறியாத உண்மை!!!

இந்த நாளில் தேவையற்ற கோபம், கடுமையான வார்த்தைகள் மற்றும் பிறரை புண்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முடிந்தவரை சைவ உணவு உண்டு, இறை வழிபாட்டில் மனதை செலுத்துவது ஆன்மீக பலனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வியாழக்கிழமை மனமுருகி இறைவனை வேண்டி நல்ல செயல்களை செய்வது, வாழ்க்கையில் நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் வளர்க்க உதவும்.

இதையும் படிங்க: நாளை வியாழக்கிழமை இந்த ஒரு காரியம் குரு பகவானின் அருளை தந்து யோகத்தை உண்டாகும்.!