கடன் தொல்லையால் தவிக்கிறீர்களா? உடனடி விமோட்சனம்.. இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க..!
கடன் பிரச்சனையில் சிக்கி இருப்போர் கும்பகோணம் சென்று திருச்சேறை கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம்.
தடைகள் நீங்கும்:
Thirucherai Vimochaneeswarar Temple: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருச்சேறை விமோசனீஸ்வரர் கோயில் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கான கோயிலாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான நெருக்கடியில் சிக்கி தவிப்பவர்கள் பலரும் இங்கு சென்று இறைவனை வணங்குவது உண்டு. இதனால் நீண்டகால கடன் சுமைகள் குறைந்து, பணவரவில் இருக்கும் தடைகள் நீங்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #JUSTIN: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்.. 2 பேர் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு தடை.!

கடன் குறையும்:
தொழில் வருமானம் பெருகவும், பொருளாதார சிக்கலால் இருக்கும் மனஅழுத்தமும் சரியாகும், பயம் குறைந்து வாழ்க்கையில் புதிய நம்பிக்கை, மனநிம்மதி கிடைக்கும். மூலவரை மனமுருகி பிரார்த்தனை செய்ய பல ஆண்டுகளாக நீடித்து வரும் கடன் சுமைகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில் நஷ்டம், வாரா கடன் சிக்கல் தீர்க்கும் வழிபாடு கோயிலாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: கண் திருஷ்டியால் அவதிப்படுறீங்களா? இந்த விஷயங்களை செய்து பாருங்க.!