வகுப்பறைக்கு 10 நிமிடம் லேட்டாக போன 8 வயது சிறுமி! ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனையால் நடந்த அதிர்ச்சி..... பதைபதைக்கும் காட்சி!!!



8-year-old-girl-dies-after-teacher-punishment

வகுப்பறைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த 8 வயது சிறுமிக்கு, ஆசிரியர் கடுமையான தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது. கனமான பள்ளிப் பையை முதுகில் சுமந்தபடி 100 முறை தோப்புக்கரணம் போடச் செய்த நிலையில், சிறுமி மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தார்.

தாமதமாக வந்த மாணவிக்கு கடுமையான தண்டனை

வகுப்புக்கு தாமதமாக வந்த காரணத்துக்காக சிறுமிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிப் பையை கழற்றாமல், தொடர்ந்து 100 முறை தோப்புக்கரணம் போட ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார். உடற்பயிற்சியைத் தாங்க முடியாமல் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Zipline சவாரி : இளைஞரின் சட்டையை பிடித்து இளம்பெண் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழநத 24 வயது இளைஞர்..!

மருத்துவமனையில் சிகிச்சை; உயிரிழந்த சிறுமி

இதையடுத்து உடனடியாக சிறுமி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதிகப்படியான உடல் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர் கைது

சிறுமியின் உயிரிழப்பு குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, தண்டனை அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் கடுமையான தண்டனை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் தண்டனை தொடர்பான விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 9 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்? மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு!