11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் விராட்கோலி - வில்லியம்சன்! இந்த கதை தெரியுமா உங்களுக்கு?
11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் விராட்கோலி - வில்லியம்சன்! இந்த கதை தெரியுமா உங்களுக்கு?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுபெற்ற நிலையில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் 2008 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட அணியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதியில் மோதியது.
இதில் இந்திய அணி வெற்றிபெற்றது. தற்போது 11 வருடங்கள் கழித்து மீண்டும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளது. இந்தமுறை மீண்டும் இந்திய அணி வெற்றிபெறுமா? இல்லை, இந்திய அணியை பழிதீர்க்குமா நியூசிலாந்து அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.