#BigBreaking: பயங்கர விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

#BigBreaking: பயங்கர விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!



Cricketer Rishabh Pant Car Accident Injury

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், நேற்று நள்ளிரவு நேரத்தில் டெல்லியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலத்தின் ரூர்கே பகுதிக்கு சென்றுகொண்டு இருந்தார். 

Rishabh Pant

அப்போது, அவர் பயணித்த கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. ரூர்கேவில் உள்ள நர்சன் பார்டர் பகுதியில், சாலைத்தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயமடைந்து இருக்கிறார். 

Rishabh Pant

அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.